உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்; கொலையா?

Published On 2023-08-11 10:08 GMT   |   Update On 2023-08-11 10:08 GMT
  • உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் அந்த நபரது உடல் காணப்பட்டது.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே உள்ள கம்பர் நத்தம் அக்கரை நெடுந்தரை அருகே நெய்வாசல் வாய்க்காலில் இன்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.

உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் அந்த நபரது உடல் காணப்பட்டது.

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். ஆனால் மர்மமான முறையில் இறந்து கிடப்பவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை . உடலில் சில இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யாரேனும் அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றனரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News