உள்ளூர் செய்திகள்

இன்று இரவு திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

Published On 2024-09-15 09:00 GMT   |   Update On 2024-09-15 09:00 GMT
  • முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.
  • 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும்.

தஞ்சாவூா்:

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்-06008) பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு சென்று அடையும்.

இந்த ரெயிலில் 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். எனவே, பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News