உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற் தகுதி தேர்வு

Published On 2023-11-06 08:22 GMT   |   Update On 2023-11-06 08:22 GMT
  • வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளை நடக்கிறது
  • செல்போனுக்கு தடை - ஆடை கட்டுப்பாடு

வேலூர்:

தமிழகத்தில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உட்பட 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 513 நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளையும், நாளை மறுநாளும் (8-ந் தேதி) நடக்க உள்ளது. இதற்காக, அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் நடக்கும் உடற்தகுதி தேர்வில் நாளை உயரம், மார்பளவு மற்றும் 1,500 மீ ஓட்டம் ஆகியவையும், 8-ந் தேதி உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், கையிறு. ஏறுதல், 100 மற்றும் 400மீ. ஓட்டம் ஆகியவை நடக்கிறது.

வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடிப்படை ஐ.ஜி முருகன் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் நபர் கள் செல்போன் எடுத்து வரவும், ஒரே மாதிரியான உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற் தகுதி தேர்வு நடக்கும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

தேர்வு மையத்துக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படு வார்கள். வெளிநபர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News