உள்ளூர் செய்திகள் (District)

நிலத்தில் இருந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

Published On 2023-08-15 09:09 GMT   |   Update On 2023-08-15 09:09 GMT
  • வனத்துறையினர் பிடித்தனர்
  • காப்பு காட்டில் விட்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தென்புதூர் கிராம ஒருவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது.

நேற்று மாலை அந்த மந்தோப்பில் சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வனக்காப்பாளர்கள் மனிவாசுகி, அஜித், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து நிலத்தில் இருந்த 30 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள இராசிமலை காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News