உள்ளூர் செய்திகள்

சாலை பணிகளுக்கு ரூ.21 கோடி சிறப்பு நிதி: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!

Published On 2024-07-05 09:01 GMT   |   Update On 2024-07-05 09:13 GMT
  • குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.
  • சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரி:

மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.

மேலும் களியக்காவிளை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம், பர்வதிபுரம் மேம்பாலங்கள் பழுதடைந்து இருப்பதை விளக்கி உடனடியாக அவற்றை சீர் செய்ய ரூபாய் 21 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News