தமிழ்நாடு (Tamil Nadu)

எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம்- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-07-08 08:05 GMT   |   Update On 2024-07-08 08:05 GMT
  • எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
  • முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.

சேலம்:

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லாததால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

* தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.

* ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

* தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.

* எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.

* காவல் அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாது.

* ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

* முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.

* எந்தெந்த துறைகளில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம் என்று கூறினார்.

Tags:    

Similar News