உள்ளூர் செய்திகள்

குழந்தை சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-24 07:57 GMT   |   Update On 2023-08-24 07:57 GMT
  • குழந்தை சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

தேசிய அளவில் வீரதீர செயல் கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கவுரவப்ப டுத்தும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஸ்ட்ரிய பால் புரஸ்கார் விருது மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வீரதீர செயல் புரிந்த குழந்தைகளுக்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என 2 பிரிவுகளாக வழங்கப்பட வுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும், இந்தியா வில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 31-ந்தேதியன்று 18 வயதிற்குள் இருத்தல் வேண்டும், கடந்த 2 ஆண்டுகளுக்குள் விருதிற்கான சிறந்த செயல் மற்றும் சாதனை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News