உள்ளூர் செய்திகள் (District)

விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2022-06-10 09:36 GMT   |   Update On 2022-06-10 09:36 GMT
  • விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் சின்னையா புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாயி. இவர் தோட்டத்தில் தென்னை ஓலை பின்னும் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதை தொடர்ந்து வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மச்சக்காரப்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News