உள்ளூர் செய்திகள் (District)

திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

Published On 2023-04-15 08:27 GMT   |   Update On 2023-04-15 08:27 GMT
  • திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
  • சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 10 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு பல்வேறு சமூகத்தினரும் விழாவை கொண்டாடினர்.

11-வது நாள் பூக்குழி திருவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் தீக்குண்டத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி தீ மிதிக்கும் பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தை வந்தடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News