உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு

Published On 2022-09-15 09:13 GMT   |   Update On 2022-09-15 09:13 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு நடந்தது.
  • ‘மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?’’ என்பது குறித்து ஆங்கிலத்துறை பேராசிரியர் சொற்பொழிவாற்றினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை ஆய்வுமன்றமான ''மினர்வா'' சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது.

ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கே.பி. ஸ்வப்னா, வெளிப்ப டையான யதார்த்தவாதக் கோட்பாடுகள் மற்றும் கேத்தரின் பெல்சேயின் யதார்த்தவாதக் கோட்பா டுகளின் கருத்துகளை விளக்கினார். அவர் பேசுகையில், இந்த கோட்பாடுகள் ஆய்வுகளில் எவ்வாறு செயலாக்க முடியும்? என்பது பற்றியும், ஆய்வுகளை நுண்ணறிவு மிக்கதாகவும், ஆர்வ மிக்கதாகவும் கோட்பாடுகள் மாற்றுவதைப் பற்றி யும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் எஸ்.சாந்தி, ''மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?'' என்பது குறித்து சொற்பொழிவாற்றினார்.அவர் மொழி வகுப்புகளை விரிவான முறையில் கையாளுவதற்கான வழி முறைகளை வழங்கினார்.

உதவிப்பேராசிரியர் எம்.பரிதா பேகம் நன்றி கூறினார்.இதில் ஆங்கிலத்துறையின் அனைத்துப் பேராசிரி யர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News