உள்ளூர் செய்திகள் (District)

மனைவி கறிச்சோறு சமைத்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை

Published On 2022-09-09 07:21 GMT   |   Update On 2022-09-09 07:21 GMT
  • ராஜபாளையம் அருகே மனைவி கறிச்சோறு சமைத்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர்ராஜபுரம், இந்திராநகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 69) விவசாயி. இவர் நேற்று தனது மனைவியிடம் கறிக்குழம்பு வைத்து சோறு தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த அவரது மனைவி ''நீங்களே சமைத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்'' என்று கூறவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாடசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகன் ஜெயபிரகாஷ் என்பவரிடம் ''நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை''. தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து விட்டேன்.

உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் விஜயபிரகாஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி கறிச்சோறு செய்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News