விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்
- விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டானில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று மற்றும் பண்ணைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று, பண்ணைக்கருவிகளை வழங்கினர்.
இதில் எம்.எல்.ஏ பேசுகையில், விவசாயிகளின் நலன் காக்கும் அரசு நமது தமிழக அரசு. அதனால்தான் முதல்-அமைச்சர் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை நடைமுறை படுத்திவருகிறார்.ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஆட்சியில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. தற்போது 7 இடங்களில் செயல்படுகிறது.
அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் திருமலைச்சாமி, வேளாண்மை துறை அதிகாரி தனலட்சுமி, கிளை செயலாளர் நடராஜன், சிவா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.