காளீஸ்வரி கல்லூரி: ஆங்கிலத்துறை சார்பில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- செயலாளர் செல்வராஜன் வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் இதழியல் மற்றும் பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பு, தொழில் வளர்ச்சி மையம் இணைந்து அளித்த பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் "காளீஸ்வரி லைம்ஸ் & ஹனி காம்ப் ஸ்கூப்-6'' வெளியீட்டு விழா ஆகியவை கூட்ட அரங்கில் நடந்தன.
கல்லூரியின் செயலாளர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்தும் விளக்கினார். சிறப்பு விருந்தினராக ஆங்கில பத்திரிக்கையின் முன்னாள் துணை ஆசிரியர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசுகையில், பயிற்சியில் மாணவர்களின் பங்கு மற்றும் அவர்களின் சிறந்த படைப்புகளைப் பற்றி கூறினார். 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் என் செலின்காயத்ரி, 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் சண்முகவேல், ஆங்கிலத்துறை முன்னாள் மாணவி முத்துமாரி ஆகியோரிடம் இருந்து பின்னூட்டம் பெறப்பட்டது.
கல்லூரியின் செயலாளர். அ.பா.செல்வராஜன் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை ஸ்வப்னா வரவேற்றார். ஆங்கிலத்துறைத் தலைவி பெமினா நன்றி கூறினார்.