உள்ளூர் செய்திகள் (District)

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு காளீஸ்வரி கல்லூரி உதவி

Published On 2023-03-25 07:47 GMT   |   Update On 2023-03-25 09:52 GMT
  • மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் ரூ. 69 ஆயிரம் மதிப்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
  • இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் சாட்சியாபுரம் எல்வின் நிலைய மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் கூறினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக 130 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை வணிகவியல் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி கலையரங்கத்தில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. நடப்பாண்டு இளங்கலை வணிகவியல் துறை மற்றும் இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் ரூ.69 ஆயிரத்து 500 மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள், அரிசி, கோதுமை, இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கினர்.

Tags:    

Similar News