உள்ளூர் செய்திகள் (District)
மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
- இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.
நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. அதில் ரூ. 55 லட்சத்து 5 ஆயிரத்து 70-ம், தங்கம் 231.650 கிராமும், வெள்ளி 1386.900 கிராமும் கிடைத்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டியை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை அய்யப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம்,மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.