உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் விழா

Published On 2022-07-26 08:23 GMT   |   Update On 2022-07-26 08:23 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
  • துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடந்தது.

துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

சிவகாசி கிளையின் வங்கி மேலாளர்கள் காசிராஜன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

அவைகளை கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மனோஜ்குமார், ராஜூவ் காந்தி, தேவி ஆகியோர் நட்டு ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News