உள்ளூர் செய்திகள் (District)

விருதுநகர் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-07-07 09:35 GMT   |   Update On 2022-07-07 09:35 GMT
  • விருதுநகர் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் 8-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 42) என்பவர் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இதில் மண்எண்ணை செல்வம் என்பவரது கடையும் அடங்கும்.

தங்களது கடையை அகற்றியதற்கு கவுன்சிலர் பால்பாண்டி தான் காரணம் என மண்எண்ணை செல்வ மும், அவரது மகன் சங்கரும் கருதினர்.இந்த நிலையில் நேற்று பால்பாண்டி அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர் கடையை அகற்றியது தொடர்பாக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார்.

அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த தாக சங்கர் மீது கவுன்சிலர் பால்பாண்டி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News