உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

Published On 2023-05-28 08:23 GMT   |   Update On 2023-05-28 08:23 GMT
  • பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • மாரிமுத்துவை கைது செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாலமுருகனுடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்ப்பவர் மாரிமுத்து (21). இவர் அடிக்கடி பாலமுருகன் வீட்டுக்கு வந்து குழந்தையை கொஞ்சுவது போல் நோட்டமிட்டு கொண்டு இருப்பாராம். இதனை ஜெயமணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து ஜெயமணியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். ஆனால் ஜெயமணி வீட்டின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.

இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் ஜெயமணிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு மாரிமுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

Similar News