உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2022-09-21 06:59 GMT   |   Update On 2022-09-21 06:59 GMT
  • பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
  • மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார்.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியும், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது. மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார். மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, ராஜபாளையம் அலுவலர் ராஜேஷ், மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மாநில நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் சேவுகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்களை மேயர் சங்கீத இன்பம், கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிவக்குமார் வெளியிட்டனர். இயக்குனர் காசீஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News