உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

மழை குறைந்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

Published On 2023-09-21 06:06 GMT   |   Update On 2023-09-21 06:06 GMT
  • மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது.
  • வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லைப்பெ ரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு 286 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. ேசாத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.19 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 1.4, மஞ்சளாறு 11, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News