உள்ளூர் செய்திகள் (District)

பெண் ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கிய போது எடுத்த படம்.

தூத்துக்குடியில் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-04 09:15 GMT   |   Update On 2022-12-04 09:15 GMT
  • முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது
  • மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தையல் எந்திரத்தையும், பேராசிரியை பாத்திமா பாபு குடங்களையும், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் சேலைகளையும் வழங்கினர்.

தூத்துக்குடி:

முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. விழாவில் தையல் எந்திரம், குடங்கள், சேலை என 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பீட்டர் பர்னாண்டோ தலைமை தாங்கினார். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் ரோமால்டு, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் ஜான்சன், பியோ பரதர், எழுத்தாளர் பீட்டர் பிரான்சிஸ், தேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தையல் எந்திரத்தையும், பேராசிரியை பாத்திமா பாபு குடங்களையும், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் சேலைகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் சசிக்குமார், சேவியர் சில்வர, டெரன்ஸ், கல்யாண சுந்தரம், அலாய், அமலன், சேரானந்தம், சுடலைமுத்து, தராஜ், பிரைட்டன், தினேஷ், ஆனந்த் பாண்டியன், வர்கீஸ், பிரவின், சல்வடோர், இனிகோ, தினேஷ், கிரிஸ்டோ, ராஜா, சுரேஷ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், நிஷாந்த், கென்னடி, ஜே.பி., மற்றும் பாத்திமா நகர், திரேஸ்புரம், குரூஸ்புரம், லூர்தம் மாள்புரம், லயன்ஸ்டவுன், இனிகோ நகர், காந்திநகர், மரக்குடி தெரு, மாதா கோவில்தெரு இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஹெர்மென் கில்டு வரவேற்றார். எழுத்தாளர் ஆசிரியர் நெய்தல் அண்டோ சிறப்புரை நிகழ்த்தினார். எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்

Tags:    

Similar News