உள்ளூர் செய்திகள் (District)

பயணியிடம் பர்ஸ் திருட முயன்ற பெண் கைது

Published On 2023-04-18 08:29 GMT   |   Update On 2023-04-18 08:29 GMT
  • பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லில்லியை கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49) தொழிலாளி.

சம்பவத்தன்று ரமேஷ் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.

அப்போது அவருடைய சட்டைப் பையிலிருந்த பர்சை ஒரு பெண் திருட முயன்றார்.

உடனே அருகில் நின்றவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஆந்திர மாநிலம் நகரி மாவட்டத்தை சேர்ந்த முனியசாமி மனைவி லில்லி (45) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லில்லியை கைது செய்தனர்.

Tags:    

Similar News