உள்ளூர் செய்திகள் (District)

சாம்பவர் வடகரை அருகே இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2022-09-13 08:58 GMT   |   Update On 2022-09-13 08:58 GMT
  • சாம்பவர் வடகரை அருகே உள்ள ஊர்மேல்அழகியான் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது25). லாரி டிரைவர். இவரது மனைவி தங்கமதி (22).
  • குடும்ப பிரச்சினை காரணமாக அதிக மாத்திரைகளை சாப்பிட்டார்.

சாம்பவர் வடகரை:

சாம்பவர் வடகரை அருகே உள்ள ஊர்மேல்அழகியான் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது25). லாரி டிரைவர். இவரது மனைவி தங்கமதி (22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தங்கமதி, குடும்ப பிரச்சினை காரணமாக அதிகமாத்திரைகளை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கமதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News