உள்ளூர் செய்திகள் (District)

காதலித்து திருமணம் செய்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-12-01 10:04 GMT   |   Update On 2023-12-01 10:04 GMT
  • தருமபுரி அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • கிராம நிர்வாக அலுவலர் புகார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிபட்டி அருகே உள்ள போலனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சஞ்சீவன், இவருக்கும் கொல்லி மலையை சேர்ந்த சதாசிவம் மகள் மோகனப்பிரியா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 4 ந்தேதி மோகனப்பிரியா, விஷம் சாப்பிட்டதாகவும் அவரை மீட்டு கொங்களாபுரம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மோகனப்பிரியா உயிரிழந்தார். அவரது உடல் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சவக்கடங்கில் உள்ளதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News