- தருமபுரி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது.
- போலீசார் நடவடிக்கை.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள செல்லம்பட்டி கிராமத்தை சேந்தவர் பழனி மகன் பாபு(37) லாரி மெக்கனிக் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மெக்கனிக் ஷாப் அமைந்துள்ள அரூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பேட்ரோல் பங்க் அருகில் பழுதான ஒரு லாரியில் டிரைவர் மஸ்தான் தனது செல்போனை வைத்து விட்டு அதே லாயில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வந்த மர்ம நபர்கள் 2 பேர் லாரியில் இருந்த செல்போனை திருடி சென்றனர்.
இதனையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று பாபு மற்றும் டிரைவர் மஸ்தான் இருவரும் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவரிடம் மஸ்தான் செல்போன் இருந்தது. இது குறித்து பாபு அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் அரூர் முருகன் கோவில் பகுதியை சாமா மகன் ஷானாவாஷ்(20) என்றும் அவரது மேல்பாட்சாபேட்டை சேர்ந்த கவின் இருவரும் சேந்து செல்போனை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஷானாவாஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள கவினை தேடி வருகின்றனர்.