உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் பழைய இரும்பு கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-08 08:58 GMT   |   Update On 2023-05-08 08:58 GMT
  • மைக்கேல் ஞானசேகர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • கடை கதவு உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

நெல்லை:

சங்கரன்கோவில் கக்கன்நகரை சேர்ந்தவர் மைக்கேல் ஞானசேகர். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மைக்கேல் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடை கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வேலுசாமி(வயது 32) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் திருடியது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News