உள்ளூர் செய்திகள் (District)
தூத்துக்குடியில் மொபட் திருடிய வாலிபர் கைது
- காளிமுத்து பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார்.
- மொபட்டை கார்த்திக் என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது.
தூத்துக்குடி:
புதியம்புத்தூர் புதுச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 62). விவசாயி. இவர் தூத்துக்குடி பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார். பின்னர் பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மொபட்டை தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4 -வது தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.