உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-11-27 10:38 GMT   |   Update On 2023-11-27 10:38 GMT
  • தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
  • மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கொம்மனநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24). இவரது மனைவி நதியா (21). சபரி சென்டரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வேலை முடிந்து இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது பாலக்கோடு் தேசிய நெடுஞ்சாலை கோடியூர் பாரதி நகர் அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சபரியின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் சபரியும், மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் உட்பட 3 பேரும் காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீ சார் வழக்கு விசாரணை நடத்தியதில், எதிரே மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த 2 பேரும் பாலக்கோடு அருகேயுள்ள எண்டப்பட்டி கிராமத்தை சேர்்ந்த பாஸ்கர் மகன் கண்ணப்பன் (18), முத்துசாமி மகன் திருக்குமரன் (18) என தெரியவந்தது.

காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Similar News