செய்திகள்

நடிகர் சஞ்சை தத்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு- பா.ஜ.க. ஆட்சி தொடர ஆதரவு கோரினார்

Published On 2018-06-09 08:26 GMT   |   Update On 2018-06-09 08:26 GMT
மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் உத்தரப்பிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று நடிகர் சஞ்சை தத்தை சந்தித்தார். #BJP #samparkforsamarthan
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

அவ்வகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லி பிஷப் வாரிஸ் கே.மஸிஹ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து இன்று பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சஞ்சை தத்தை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவை கோரியுள்ளார்.

முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மோடியின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை சஞ்சய் தத்துக்கு வழங்கினார். #BJP #samparkforsamarthan
Tags:    

Similar News