செய்திகள்

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஆர்.என்.ரவி நியமனம்

Published On 2018-10-04 16:25 GMT   |   Update On 2018-10-04 16:25 GMT
கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #RNRavi #DeputyNSA
புதுடெல்லி:

ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை துவக்கிய ஆர்.எம்.ரவி தற்போது கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். நாகலாந்துக்கான தேசிய சோசலிச குழுவின் அரசு பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அவரை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்வுக்குழு ஒருமனதாக அளித்துள்ளது. தற்போது அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RNRavi #DeputyNSA
Tags:    

Similar News