செய்திகள் (Tamil News)
ஹெலிகாப்டரில் பறக்கும் கனவை மலிவு விலை காரில் நிறைவேற்றிக் கொண்ட பீகார்வாசி
பீகார் மாநிலத்தை சேர்ந்த மிதிலேஷ் பிரசாத் சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்து அதில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அது நிறைவேறாததால் தனது மலிவு விலை காரை ஹெலிகாப்டர் போல் மாற்றிக் கொண்டுள்ளார்.
பாட்னா:
குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது வாலிப வயதை கடந்தும் அந்த ஆசை நிறைவேறாத நிராசையாகிப் போனதால் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. மாறாக, ஒரு ஹெலிகாப்டருக்கு உள்ளது போன்ற வால் மற்றும் இறக்கை பகுதியை தனது ‘டாட்டா நானோ’ காருக்கு பொருத்தி அதில் மிதிலேஷ் தற்போது ஒய்யாரமாக பவனி வந்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவரது ஒய்யார பவனி வானத்தில் அல்ல, வெறும் சாலையில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம், சரன் மாவட்டத்துக்குட்பட்ட சப்ரா என்ற கிராமத்தை சேர்ந்த மிதிலேஷ் பிரசாத். சிறு வயது முதல் சொந்தமாக நாம் ஒரு ஹெலிகாப்டர் தயாரித்து அதில் சொகுசாக பறக்க வேண்டும் என்ற தணியாத ஆசை மிதிலேஷின் மனதில் குடிகொண்டிருந்தது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது வாலிப வயதை கடந்தும் அந்த ஆசை நிறைவேறாத நிராசையாகிப் போனதால் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. மாறாக, ஒரு ஹெலிகாப்டருக்கு உள்ளது போன்ற வால் மற்றும் இறக்கை பகுதியை தனது ‘டாட்டா நானோ’ காருக்கு பொருத்தி அதில் மிதிலேஷ் தற்போது ஒய்யாரமாக பவனி வந்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவரது ஒய்யார பவனி வானத்தில் அல்ல, வெறும் சாலையில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.