இந்தியா
மெட்ரோ பார்க்கிங்

குடியரசு தினவிழா - டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்கள் நாளை, நாளை மறுநாள் மூடல்

Published On 2022-01-24 09:04 GMT   |   Update On 2022-01-24 10:03 GMT
குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தினம் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

குடியரசு தினவிழா பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் இந்தியாவில் குடியரசு தினவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News