இந்தியா

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 29 வயது இளைஞர் கைது

Published On 2024-08-26 03:34 GMT   |   Update On 2024-08-26 03:34 GMT
  • 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த சம்பவத்தில் 29 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கொள்ளை முயற்சியின் போது 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் என்ற 29 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டியிடம் இருந்து சுமார் ஏழு சவரன் தங்கத்தை திருடியதாகவும், நகைகளை விற்க முயன்ற போது பிடிபட்டதாகவும் போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட தனேஷ், மூதாட்டி தனியாக வசித்து வருவதை தெரிந்து கொண்டு அவரது வீட்டிக்கு சென்று கொள்ளையடித்ததுமின்றி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பின்னர் அவரது செல்போனை திருடி விட்டு, கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் இன்று காலை மூதாட்டியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அவர் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News