இந்தியா (National)

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2024-10-12 07:39 GMT   |   Update On 2024-10-12 09:54 GMT
  • வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இதனால், வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News