இந்தியா

ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொலை

Published On 2024-09-09 19:10 GMT   |   Update On 2024-09-09 19:10 GMT
  • பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
  • போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர் தர்லோஜன் சிங் (வயது 60). இவர் ஹனா பகுதி ஆம் ஆத்மி விவசாய பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி நிர்வாகியான இவர் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தர்லோஜன் சிங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தர்லோஜன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News