இந்தியா (National)

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆர்.ஜி.கர் முன்னாள் தலைவருக்கு தூக்கு: நீதிமன்றம்

Published On 2024-09-28 03:04 GMT   |   Update On 2024-09-28 03:04 GMT
  • கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
  • சந்தீப் கோஷ் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஜாமின் மறுத்த சிபிஐ நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனா். இவா்களின் மனு மீது கடந்த வாரம் விசாரணை மேற்கொண்ட கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் எஸ்.டே கூறுகையில், 'பெண் மருத்துவா் கொலை தொடா்பான சிபிஐ விசாரணை முழு வீச்சில் நடைபெறுவது வழக்கு குறிப்பேடு மூலம் தெரிகிறது. சந்தீப் கோஷல் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடும்' என்று தெரிவித்து சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டலின் ஜாமின் மனுக்களை நிராகரித்தார்.

கடந்த மாதம் அரசு நடத்தும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்ததாகவும் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

Tags:    

Similar News