இந்தியா (National)

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை

Published On 2024-10-06 07:05 GMT   |   Update On 2024-10-06 07:05 GMT
  • 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  • 5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (7-ந்தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.

கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News