இந்தியா (National)

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

Published On 2024-08-01 05:27 GMT   |   Update On 2024-08-01 05:28 GMT
  • நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு .
  • 460 பகுதிகள் அபாய பகுதிகளாக அறிவிப்பு.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், 76 இடங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வயநாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு, பதிஞ்சசரதாரா உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேபோல் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்பட 20 இடங்களிலும், மலப்புரத்தில் அமரம்பலம், கருளை, சோக்காடு, கருவரக்குண்டு உள்ளிட்ட இடங்களிலும், பாலக்காட்டில் 3 இடங்களிலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அருவாப்புலம், சீத்தாத்தோடு, சித்தார் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News