இந்தியா (National)

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருவர் நியமனம்

Published On 2024-07-16 08:25 GMT   |   Update On 2024-07-16 08:25 GMT
  • கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
  • சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி கோடீஸ்வரர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாகினர்.

காலியாக இருந்த 2 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

 

பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News