இந்தியா

புரட்டாசி மாதம் தொடங்குவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2024-09-16 04:48 GMT   |   Update On 2024-09-16 04:48 GMT
  • திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும்.
  • திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும். நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் பக்தர்கள் முதல் நாளிலேயே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகின்றனர்.

சனி, ஞாயிறு தொடர் விடுமுறை மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் பஸ், கார், வேன் மூலமாகவும் நடை பயணமாகவும் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதனால் தரிசன வரிசையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ரூ.300 ஆன்லைன் சிறப்ப தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 15 மணி நேரத்திலும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை புரட்டாசி மாதம் முதல்நாள் என்பதால் மேலும் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர். 33,138 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News