இந்தியா

உண்ணாவிரத போராட்டத்தை தவிர வேறு வழியில்லை: அதிஷி

Published On 2024-06-22 10:17 GMT   |   Update On 2024-06-22 10:17 GMT
  • அரியானா அரசு குறைவாக தண்ணீர் வழங்குவதால் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.
  • மக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் அரியானா தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும்.

டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில்தான் நேற்று டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிஷி கூறியதாவது:-

இது என்னுடைய 2-வது உண்ணாவிரத நாள். டெல்லியில் மிகவும் மோசமான வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. டெல்லி மாநிலம் 1005 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கலோன்ஸ்) பெற்று மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

அரியானா மாநிலம் இதில் 613 எம்ஜிடி தான் வழங்க வேண்டும். சில வாரங்களாக அரியானா மாநிலம் 513 எம்ஜிடிதான் வழங்குகிறது. இதனால் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெற முடியாமல் உள்ளனர்.

எல்லாவகையிலும் நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அரியானா அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதை தவிர வேறு வழியில்லை.

டெல்லி குடிநீர் வாரியத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது குடிநீர் பிரச்சினை இன்னும் தொடர்வதாக தெரிவித்தனர். நேற்று 110 எம்ஜிடி குறைவாக அரியானா சப்ளை செய்தது. 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெறும் வகையில் அரியானா தண்ணீர் திறந்து விடும்வரை என்னுடைய உண்ணாரவிரதம் தொடரும்.

இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News