இந்தியா

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

Published On 2024-01-23 14:50 GMT   |   Update On 2024-01-23 14:50 GMT
  • ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்.
  • பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 


கர்பூரி தாக்கூர் 1970-71 மற்றும் 1977 முதல் 79 காலக்கட்டங்களில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நாளை (ஜனவரி 24) கர்பூரி தாக்கூரின் பிறந்த தினம் என்ற வகையில், இன்று அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News