இந்தியா

பா.ஜனதா கூட்டணி 200 இடங்களை கூட தாண்டாது: மல்லிகார்ஜூன கார்கே

Published On 2024-05-28 12:08 GMT   |   Update On 2024-05-28 12:08 GMT
  • அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.
  • பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாரஜூன கார்கே இன்று அமிர்தசரஸ் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறது. ஆனால், அவர்களுடைய சீட் எண்ணிக்கை குறையும்போது, எங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். 400 இலக்கை அவர்கள் மறந்துவிட வேண்டியதுதான். அது அர்த்தமற்றது. அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.

பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி 400 இடங்கை பிடிக்க முடியும்.

நான் அரசியலில் இணைந்தது பதவிக்காக இல்லை. நான் சிறுவயதில் இருந்து, மோடி வயதை காட்டிலும் கிட்டதட்ட அதிக ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இருக்கிறேன். இதனால் எனதை பதவியை பற்றி யோசிக்காமல், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவருடைய பதவி குறித்து அமித் ஷா யோசிக்க வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News