இந்தியா (National)

கர்நாடக மாநில விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- அதிரடி சோதனை

Published On 2024-10-20 12:04 GMT   |   Update On 2024-10-20 12:04 GMT
  • சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மாரிஹால் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாம்ப்ரா விமான நிலைய இயக்குனர் தியாகராஜின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் மாரிஹால் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News