இந்தியா (National)

பீகாரை தொடர்ந்து உத்தரகாண்டிலும் பாலம் இடிந்து விழுந்து விபத்து: வீடியோ

Published On 2024-07-07 01:01 GMT   |   Update On 2024-07-07 01:01 GMT
  • பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
  • ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

நாடு முழுவதும் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் தற்போது தொடர்கதையாகியுள்ளது.

பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

உத்தரகாண்டில் பெய்துவரும் கனமழையால் கங்கை, அலக்நந்தா, பாகீரதி, சாரதா, மந்தாகினி, கோசி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் உத்தரகாண்டில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News