இந்தியா

கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் அரசு 31-ந் தேதி போராட்டம் அறிவிப்பு

Published On 2024-08-28 07:08 GMT   |   Update On 2024-08-28 07:08 GMT
  • கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
  • ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள்.

பெங்களூர்:

கர்நாடகாவில் முடா நில ஒதுக்கீட்டு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி, முன்னாள் மந்திரி முருகேஷ் நிராணி, எம்.எல்.ஏக்கள் சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக காங்கிரஸ் மாநில தலைவரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என்று அறிவித்து உள்ளார். கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News