இந்தியா (National)

நடிகர் தர்ஷனுக்கு வரும் செப்.9 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2024-08-28 10:47 GMT   |   Update On 2024-08-28 10:47 GMT
  • ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல்.
  • இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் கோரிக்கை.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை.

அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, தர்ஷனுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News