இந்தியா (National)

குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரத்து- அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்

Published On 2024-10-24 02:11 GMT   |   Update On 2024-10-24 02:11 GMT
  • பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தடை விதித்தது.
  • டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

புதுடெல்லி:

பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை கடந்த மாதம் 28-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி வரியையும் ரத்து செய்தது.

அதேநேரம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. அதாவது டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் (சுமார் ரூ.41,200) நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாகவும் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News