இந்தியா

சாலை போட்டதும் ஏற்பட்ட பெரிய பள்ளம்.. எலி மீது பழி போட்ட அதிகாரி பணிநீக்கம்

Published On 2024-09-19 15:09 GMT   |   Update On 2024-09-19 15:09 GMT
  • ராஜஸ்தானில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
  • எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று ஊழியர் ஒருவர் தெரிவித்தார்

டெல்லி-மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை போடப்பட்டால் டெல்லி-மும்பைக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12-13 மணிநேரமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80% பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 1 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.

இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர், எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று தெரிவித்தார். ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, தண்ணீர் கசிவு காரணமாக தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்றும் பள்ளம் விரைவில் சரிசெய்யபட்டது என்று தௌசாவில் உள்ள விரைவுச் சாலையின் திட்ட இயக்குநர் பல்வீர் யாதவ் தெரிவித்தார்.

Tags:    

Similar News