இந்தியா

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்

Published On 2024-06-19 05:45 GMT   |   Update On 2024-06-19 05:45 GMT
  • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  • ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். மேலும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி, ஆகஸ்ட் மாதம் இலங்கையில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News